திருவள்ளுவரைப் பற்றியும், அவர் இயற்றிய திருக்குறளைப் பற்றியும் 'ஆராய்ச்சி' என்ற பெயரால் வெளிவந்த கட்டுரைகளும் நூல்களும் கணக்கில் அடங்காதன. முதற் குறளில் வரும் 'ஆதி-பகவன்' என்ற இரு சொற்களைக் கொண்டு எழுந்த கற்பனைக் கதைகள் அளவில.
"வள்ளுவர் நந்தன் குலத்தில் வந்தவர்" என்பர், பிறப்பால் உயர்வு தாழ்வு காணாத பெருந்தகையாளர்கள்.
"அது உண்மையன்று; வள்ளுவர் அப்பழுக்கற்ற அந்தணர்" என்பர், அறிவை அந்தணருக்கே தனி உடைமையாக்குவோர்.
"அதெல்லாம் உண்மை கலந்த பொய்கள்; வள்ளுவர் ஆதி என்னும் புலைச்சிக்கும், பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர். அதனாற்றான், முதற் குறளில் 'ஆதி-பகவன் முதற்றே உலகு' எனக் குறிப்பிட்டுப் பெற்றோரைப் பெருமைப்படுத்தினார் என்பர் சமரச வாதிகள்.
வள்ளுவர் பிறந்த இடத்தைப்பற்றி எழுந்த வாதங்களும் பலப்பல. "வள்ளுவர் பிறந்த இடம் மதுரையே" என்பர் பாண்டி நாட்டுப் பற்றுடையோர்.
"இல்லை; வள்ளுவர் பிறந்ததும் அவர் வாழ்வாங்கு வாழ்ந்ததும் தருமமிகு சென்னையே" என்பர் தொண்டை மண்டலத் தொடர்புடையோர்.
வள்ளுவரின் சமயம் யாது? அவர் வைணவரா, சைவரா அல்லது சமணரா? என்பதைப்பற்றி நடந்த ஆராய்ச்சிகளுக்க
Related Subjects
Poetry