விஞ்ஞான முறையும், விஞ்ஞான ஆராய்ச்சியும் தமிழகத்துக்குப் புதியன அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் விஞ்ஞானிகள் பலர் வாழ்ந்திருந்தனர். அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்திருக்கும் நன்மை அளவற்றது. அவர்கள், மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கான - இன்பத்துடன் வாழ்வதற்கான- துன்பங்களிலிருந்து கரையேறுவதற்கான- வழிகள் பலவற்றைக் கண்டறிந்தனர்; உண்மைகள் பலவற்றை ஆராய்ந்து தெளிந்தனர். அவர்கள் கண்டறிந்த உண்மைகளை மனித சமுதாயம் அனுபவிக்கும்படி செய்தனர். அவர்கள் கண்டறிந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் பலனையும் மனித சமுதாயம் இன்றும் அனுபவித்துக் கொண்டு வருகிறது.
இன்றைய விஞ்ஞானிகளும் மனித சமூகம்- உலகம்- முன்னேறுவதற்கான பல உண்மைகளைக் கண்டுபிடித்துத்தான் இருக்கின்றனர். ஆயினும் மனிதப் பூண்டே இல்லாமல் நாசம் ஆக்கி அழித்துவிடக்கூடிய- உலக நாகரிகத்தையே பாழாக்கி விடக்கூடிய- உலகத்தையே சுட்டுச் சாம்பலாக்கி விடக்கூடிய-கொடுமையான அழிவுச் சக்திகளையும் கண்டுபிடித்திருக் கின்றனர். இத்தகைய சக்தியுள்ள எறிகுண்டுகள், வெடிகுண்டுகள் முதலியன செய்யப்பட்டுள்ளன. இன