சின்னஞ்சிறு வயது முதலே சிறுகச் சிறுக தாமிரத்தை உணவில் கலந்து கொடுத்து, வீரம் - விவேகம் - ஆண்மை - சுயமரியாதை உணர்வு - அத்தனையையும் இழக்குமாறு செய்துப்பின்னர், அத்தகையோரை அரண்மனைகளின் அந்தப்புரங்களிலும் பிரபுக்களின் கேளிக்கை மண்டபங்களிலும் குற்றவேல் முடிக்கும் அடிமைகளாக ஆக்கிக்கொள்வது ஆரிய இனத்தவர்களான பாரசீகர் ரோமானியர்களிடையே பழங்காலத்தில் பழக்கமாக இருந்தது.
ஆனால், 'குழந்தைப் பருவத்திலிருந்து தாமிரத்தைக் கொடுத்துச் சீராகக் கண்காணிக்க வேண்டிய சிரமம் இல்லாமலே, பிறக்கும் போதே அடிமைகளாக - மேல் ஜாதி மக்களுக்குக் குற்றவேல் செய்வதையே குலத்தொழிலாகக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயத்தோடு - கீழ்ஜாதி எனப்படும் மக்கள் அமைவது இந்துமதச் சமுதாய அமைப்பில் உறுதியாக நிலைத்துப் போயிருக்கும் பீடை.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி - பிறவியிலேயே உயர்ந்த குலத்தவன் தாழ்ந்த குலத்தவன் என்று பிரித்துப் போடும் அவலம் - இந்து மதத்தின் அடிப்படை தத்துவம்.
இந்தப் பீடையை உடைத்துத் தூளாக்குவதற்காகக் கடந்த காலத்தில் முயன்ற அத்தனைப் பேரும் அதனை அவ்வப்போது சற்று அசைத்துக் காட்டினார்களே தவிர,