பிள்ளையின் இமை பிரிக்க போராடும் அன்னையின் நிலைதான் எனக்கும் அவள் வருடமொருமுறை பிரசவிக்கிறாள். நான் விநாடிக்கொரு முறை பிரசவிக்கிறேன் என் வலிகளை. அலங்கோலப் படுத்தப்பட்டது ஆடைகள் மட்டுமல்ல அவன் மேல் நான் கொண்ட அன்பும் தான். எந்நிலைக்கும் முந்நிலை ஒன்றிருக்கும் அந்நிலைதான் இந்த விலைமகளின் விலையில்லா கடிதம். லதாசரவணன் தன்னம்பிக்கை பேச்சாளர், 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய எழுத்தாளர் என, பன்முகத் தன்மையுடன் பயணிப்பவர். இவர் முதலில் எழுதிய சிறுகதை, கூட்டு குடும்ப சிக்கல்கள், திருமணம் குறித்து, 2003ல், வார இதழ் ஒன்றில், 'மாலினி' என்ற தலைப்பில் வெளியானது. தொடர்ந்து, தற்போது வரை, வார இதழ்கள், நாளிதழ்களில், 60க்கும் மேற்பட்ட நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. தவிர, பதிப்பகம் வழியாக வெளியான, 20க்கும் மேற்பட்ட புத்தகங்களும் அடங்கும். திருநங்கையர் வாழ்க்கை சூழல் பற்றி, இவர் எழுதிய 'காகித பூக்கள்' 2010ல் எழுதி வெளியானது. தொடர்ந்து, 'உயிரோவியம்' தீப்பெட்டி தொழிலாளர்கள் பற்றிய, 'நெஞ்சம் மறப்பதில்லை, காலநதியில் சித்திர பாவைகள்' தன்னை அறியாமல் ஏமாந்த பெண் பற்றிய, '
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.