கதாநாயகி மைதிலி விவாகரத்து ஆனவள். திருமணத்தினால் ஏற்பட்ட ஏமாற்றங்களை இப்போதும் அழிக்க முடியாமல் தவிக்கிறாள். நான் யார்...? என் வேர்கள் எங்கே...? என்கின்ற அவள் தேடலில் அவள் வாழ்க்கை நகர்கிறது. இதற்கிடையில் தன் தோழியுடன் 'கஞ்சன் ஜங்கா' என்ற பகுதிக்கு சுற்றுலா செல்ல அங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஏற்பட்ட கலவரத்தினால் ஊரடங்கு போடப்பட்டது. அங்கு ஏற்பட்ட பல நிகழ்வுகள் அவள் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. என்ன நடந்தது? அவள் யார் என்ற தேடலுக்கான விடை கிடைத்ததா? மைதிலியின் வாழ்க்கை வேர்கள் எங்கே இருந்தது? கண்டுபிடித்தாளா...? வாங்க தேடலாம் மைதிலியின் வாழ்க்கை வேர்களை...