தோழர் மு. கருணாநிதி அவர்களின் கற்பனை உள்ள ஊற்றிலிருந்து ஊறியெழுந்து, விளிம்பு முட்டி, வழிந்தோடிய கதை ஓடுகால்களை ஒன்றாக இணைத்து, உள்ளங்கவர் ஒரு பெரும் நூற்புனலாக ஆக்கித்தரும் பெரும் பணியினை, திராவிடன் பதிப்பகத்தார் ஏற்று, வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். இந்தப் புனல் நாடெங்கும் பாய்ச்சப்படுகிறது, திராவிடன் பதிப்பகத்தாரால், கலையார்வங் கொண்டோர் அனைவரும் மாந்தி மகிமும் பொருட்டு.
தோழர் மு.கநுணாநிதி அவர்கள் ஆண்டி விளைஞர் எனினும், மிகக் குறுகிய காலத்தில் நாட்டு மக்களின் பேரன்பைக், கதை-கவிதை-காவியம்-கட்டுரை-நாடகம்-- நடிப்பு-பேச்சு- எழுத்து இன்ன பிறவற்றால் பெரிதும் கவர்ந்து விட்டார் "கருணாநிதி' என்ற சொல் மக்களின் காதில் விழும் போதெல்லாம் அவர் பேச்சைக் கேட்க-அவர் எழுத்தைப் படிக்க - அவர் நடிப்பைக் காண ஆவலுற்று நிற்கிறார்கள் மக்கள். அத்தகையவரால் எழுதப்பட்ட இந்நூலின் அருமை பெருமைகளை விரித்துக் கூறி விளங்க வைக்கவேண்டிய அவசியமேயில்லை.
படிப்போர் அனைவரும் அவற்றை எளிதில் உணர்வர்.
ஆறு கதைகள் இதன்கண் இணைக்கப்பட்டிருக்கின்றன.
வாழமுடியாதவர்கள் - வாழ முடியாதவன், வாழி வை