இந்தப் புத்தகத்தில் வரும் பத்து வரலாறுகளும் தமிழ் புலவர்களைப் பற்றியவை. அவர்கள் தம்முடைய கவித் திறத்தால் பிறரை வியப்புள் ஆழ்த்துவதும், குற்றம் தோன்றாமல் மாற்றிச் சமாதானம் சொல்வதும், உயிரை மீட்பதும், தக்காரை வாழ்த்தித் தகாதவரைக் குறிப்பாகப் பழிப்பதும், பாடல்களை வசையாகத் தொடங்கி இசையாக மாற்றுவதும், மாறுபட்ட கருத்துடையவர்களையும் மாற்றிப் பாராட்டுக் கூறச் செய்வதும் ஆகிய செயல்களை நிறைவேற்றுகிறார்கள்; சோதனைகளில் வெற்றி பெறுகிறார்கள்.
தமிழ் வேறு, தமிழ் புலவர்கள் வேறு அல்ல; ஆகையால் புலவர்களின் செந்தமிழ்ப் புலமை பல நிலைகளிலும் காரியத்தைச் சாதித்துத் தரும் வரலாறுகள் அடங்கிய இதற்கு, "தமிழின் வெற்றி" என்ற பெயரை வைத்தேன்.
இந்தப் புத்தகத்தில் புறநானூற்றுப் பாடல்களை ஒட்டிய வரலாறுகள் மூன்றும், தனிப் பாடல்களை ஒட்டியவை ஐந்தும், நூல்கள் எழுந்த வரலாறுகள் இரண்டும் உள்ளன. பாடல்களில் அமைந்த பொருளையும், அவற்றோடு உள்ள குறிப்புகளையும் கொண்டு நிகழ்ச்சிகளைக் கற்பனையினால் விரித்து அமைத்து எழுதியவை இவை.
இந்த முறையில் 'புது மெருகு', 'எல்லாம் தமிழ்' என்ற பெயருடன் இரண்டு புத்தகங்Ĩ