இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின் பொருட்டு ஒரு கடவுளையாதல் அக்கடவுளின் அடியார்களாய பல தெய்வங்களையாதல் வாழ்த்தி வழிபடுதலே யாமென்க. நிறைமொழிகளாகிய மந்திரங்கள் செப்பி உரிய கடவுளரை நினைந்து கரணங்கள் செய்தல் சிறந்த முறையென்ப கரணங்கள் பொதுவெனவுஞ் சிறப்பெனவும் இரு திறப்படும். மந்திர மிகக்கலவாது செய்யு முறை பொதுவெனவும், மந்திரத்தோடு விரிவாகச் செய்யுமுறை சிறப்பெனவுங் கருதப்படும். பொது முறையை இச்சிறுநூலுட் கூறுதும். இங்கே குறிக்கு முறையனைத்தும், விரிவாகச் சடங்குசெய்ய இயலாது உலக வாழ்க்கையி லீடுபட்டுச் சிவநெறி நிற்போர் பொருட்டு, ஆசிரியனில்லாவிடத்துச் சடங்கிற்குரியார் தாமே எல்லாம் நடத்திக்கொள்ளத்தக்க முறையிற் கூறப்பட்டுள்ளன. சைவநூல் நெறியிற்றிறம்பா மக்கள் இதனைக் குறைகூறாதி