விஷ்வாவின் திருமணத்திற்கு முன் அம்மா பாலாமணி ஒரு பாம்பு பிடரனை போய் பார்க்கிறார். ஏன்? அவனின் வாழ்வு ஏன் ஆட்டம் காண்கிறது? பாம்பிற்கும், அவனுக்கும், அம்ருதாவிற்கும் என்ன பிரச்சனை? புரபசர் கண்டுபிடித்த மருந்து, யஷ்வந்த் யார்? படியுங்கள்.வே. தீபப்ரியா எனும் இயற்பெயர் கொண்ட நூலாசிரியர், காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மண்ணில் 1980ல் பிறந்தவர். கூட்டுக் குடும்பச் சூழல், தாத்தா பாட்டிகளின், பெற்றோரின் விடாத வாசிக்கும் பழக்கம், அதன் விளைவாக வீடெங்கும் நிரம்பியிருந்த புத்தகங்கள், திரும்பிய பக்கமெல்லாம் கதைப்பெட்டகங்களாகவும், கதைசொல்லிகளாகவும் உறவுகள்! இவைதான் இவருக்குப் புதிய வாசல்களைத் திறந்து விட்டிருக்க வேண்டும். கதை எழுதும் ஆர்வம் இயல்பாய் ஏற்பட, முதல் படைப்பு 1980களில் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. முதல் சிறுகதை, "ஸ்ட்ரா!" 2000ம் ஆண்டு கல்கி இதழில் வெளிவர, எழுத்தின் மேல் ஆர்வமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அதன் பிறகு, கல்கி, குமுதம் ஹெல்த், மங்கையர் மலர், கல்கி தீபாவளி மலர், வாரமலர், தினமணிக் கதிர், மல்லிகை மகள் போன்ற வார, மாத இதழ்களில் இவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.