குடும்பங்களில் காணும் போலித்தனங்களையும், சமூக அமைப்பில் காணும் பாசாங்குகளையும் எடுத்துக் காட்டுகிறது இப்புதினம். காரண காரியத்தின் சுழற்சி இம்மி பிசகாமல் விஞ்ஞான கதியில்தான் இயங்குகிறது. இந்தப் பேருண்மை மனித வாழ்க்கைக்கும் பொருந்துகிறது. இதைப் புரிந்து கொண்ட கதைநாயகி மாலதிக்கு புன்னகைதான் வருகிறது இறுதியில். புரிந்த விஷயம் எது...? அதில் புரியாத அர்த்தம் எது...? அவரவர் வாழ்க்கை அவரவர் பார்வையின்படி