புராண காலத்தில் சகுந்தலை பட்ட வேதனையெல்லாம் இக்கதையில் சகுந்தலாவும் படுகிறாள். துஷ்யந்தனின் குழப்பங்களைப் போல ராஜ்மோஹனும் சில குழப்பங்களை அனுபவிக்கிறான். ஒரு எதிர்பாராத விபத்தின் காரணமாக தன் இரண்டு வருட வாழ்க்கையையே மறந்துவிடுகிறான் ராஜ்மோஹன். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் பெற்றோரை பிரிந்து வரக் காரணம் என்ன? தன் மனைவி மற்றும் மகனை மறந்த ராஜ்மோஹனுக்கு நினைவு திரும்புமா? சகுந்தலா மற்றும் பரத்தின் நிலை என்ன? வாசிப்போம் வாஸந்தியின் பொய்யில் பூத்த நிஜத்தில்...