WINNER - Hindu literary prize 2014 அஷோக் ஸ்ரீநிவாசன் எழுத்தில் ஒருவிதமான மர்மம் கலந்த மாயச் சரடு, மனித உறவிற்குள் புகுந்து ஒரு நெளிபாம்புபோல அசைந்துகொடுக்கிறது. இந்த உலகம் தமிழ் புனை உலகத்திற்கு மிகவும் புதிதான ஒன்றாக இருக்கும் என்று மிகத் தெளிவாக நம்புகிறேன். மண ஓடை சம்பந்தமான உணர்வியல் பகிர்வுகள் அதன் சிக்கல்கள் எல்லாமே ஒரு மென் அடர்த்தியின் பிரதிபலிப்போடு இங்கு மொழி ரீதியாகப் பரவிக் கிடக்கிறது. இதில் எந்தவிதமான தீர்மானங்களோ தீர்ப்புகளோ இல்லை. இந்த உலகம் மிகவும் அற்பமானது என்று மிக பகிரங்கமாக நம்பும் ஒரு மாய மனதின் மாயச் சித்திரம்தான் அஷோக் ஸ்ரீநிவாசனின் எழுத்துகள். மிகவும் சிக்கலான ஒரு பாதையில் நாம் பதறிப் திரும்பும் நொடியில் எதிர்ப்படும் நீல வண்ணப் பூக்கள்போல அவருடைய எழுத்துகளும் அவருடைய உலகமும் நம்மைக் கண்டடைகின்றன. அது நமக்கு ஓர் இனம் புரியாத பரவசத்தை இந்த வாசிப்பின் மூலம் தந்திருக்கிறது. -தமயந்தி
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $20. ThriftBooks.com. Read more. Spend less.