நான் வித்யா சுப்ரமணியத்தின் இரண்டாவது மகள் கவிதா. எனக்கும் எழுதுவதற்கும் ரொம்ப தூரம். சக மனிதர்களை அவரவருடைய தனிப்பட்ட குணங்களுடன் ஏற்க வேண்டும். எல்லாரும் ஒரே போலிருந்தால் வாழ்க்கை மிகவும் போரடிக்கத் துவங்கிவிடும். எல்லோரிடமும் உள்ள நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கதையின் நாயகன் பரசுராமனை போலவே எனக்கும் கற்பகாம்பாள் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் உண்டு. பரசுராமனைப் பார்த்தால், கற்பகாம்பாள் அவன் கனவில் எல்லாம் வருகிறாளே என்று, பொறாமையாக இருக்கும் எனக்கு. ஆனால் பரசுராமனுக்கு மைலாப்பூரில் இருக்கும் ஒரு கற்பகத்தைத்தான் தெரியும். ஆனால், எனக்கு இன்னொரு கற்பகத்தையும் தெரியும். என் அம்மாவின் தொட்டில் பெயர் கற்பகவல்லி. எனக்கு இரண்டு பேருமே ஒன்றுதான்.
பரசுராமனை நீங்களும் படித்து மகிழுங்கள்.
இப்படிக்கு
கவிதா சுப்ரமணியம்