"கண்ணாடி இதயமில்லை...
கடல் கை மூடி மறைவதில்லை"
கண்ணீரை கடலாக்கி... காதலால் பித்தம் அடைந்தவனுக்கு... நினைவுகள் விதைத்த நா. முத்துக்குமாரின் இப்பாடல் வரிகள் இப்புத்தகத்தின் அடித்தளமாய் திகழ்கிறது. வாழ்க்கையிலும் காதலிலும் வெற்றி தோல்விகள் சகஜம். வாழ்க்கையினுள் காதல் இருந்தாலும் அதை வெவ்வேறாகவே பிரித்துப்பார்க்கிறது இச்சமூகம். சாதி, மதம், இனம், மொழி- இவற்றினால் பிரிந்து திரியும் இச்சமூகத்தில் சிலர் வாழ்ந்துவிடுகின்றனர்; சிலர் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். வாழ்க்கையில் காதல் போராட்டங்களின் ஆழமான அனுபவங்களை இப்புத்தகத்தில் படித்து அனுபவிப்போம்.
Related Subjects
Poetry