பல நாடுகளுக்கும் செல்ல வேண்டும், பல்வேறு பண்பாடுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் சிறு வயதுக் கனவு. முத்து காமிக்ஸ், தமிழ்வாணன் எழுதிய வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று துப்பறியும் நம் சங்கர்லால் கதைகள், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் போன்றவை இந்த ஆவலைத் தூண்டின. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடங்கி, நான் நியூயார்க் வந்தவுடன் என் பயணம் மேலும் விரிவடைந்தது.