நாத்திகம் பழகும் ஒருவன் மிக தைரியமாக "என்னால் நடிக்க முடியாது மற்றவரை தொல்லை செய்யாமல் இருப்பதே ஆன்மீகம். மற்ற வழிபாடுகள் அவரவர் விருப்பம்." "என்னை சமூகத்திற்காக மாற சொல்லாதே" என்ற உண்மையை சொல்லும் ஒரு கதை.காசுக்கு விலை பேசும் அரசியலை சாட்டையால் அடிக்காமல் அடிக்கிறாள் ஒன்றில்.அனைத்து இல்லத்தரசிகளும் கடந்து வரும் நிஜம் கதையாக. மொத்தத்தில் இந்த சிறுகதைத் தொகுப்பு நம்மை ஒருசேர சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என்பதில் ஐயமில்லை.