1941-ல் எழுதிய கதைகளுக்கு 1944-ல் முன்னுரை எழுதுவ தென்பது சற்றுச் சிரமமான காரியமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அதிலும் ஒரு லாபம் இருக்கிறது என்ப து எழுத ஆரம்பித்த பின்தான் தெரிகிறது. அப்பவே புஸ்தகம் வெளி வந்திருந்தால் நான் மீண்டும் ஒருமுறை அதைப் படித்தே பார்த்திருக்க மாட்டேன். இப்பொழுது இந்தக் கதைகளை மறுபடியும் ஒருதரம் படிக்க நேர்ந்தது. "தேவலையே அந்தக் காலத்தில் நான்கூட நல்ல கதைகளாகச் சில எழுதியிருக் கிறேனே '' என்று எனக்கே ஒரு திருப்தி ஏற்பட்டது. எதிர்பாராமல் எனக்கு ஏற்பட்ட இந்தக் திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் மூலகாரணமான அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு எனது நன்றியை ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
அல்லயன்ஸ் கம்பெனியாருக்கு இன்னும் பல விதங்களிலும் நான் கடமைப்பட் டிருக்கிறேன். "ஆசிரியர் கதைகளைத்தான் சிரமப்பட்டு எழுதினார்; அச்சுப் பார்த்துத் திருத்தும் சங்கடமான வேலையையும் அவரிடம் தந்து அவரைச் சிரமப்படுத்துவானேன்;?" என்று பிரசுராலயத்தார் தாங்களே பார்த்து அச்சிட்டுவிட்டார்கள். அதற்கும் எனது நன்றி. இதில் உள்ள கதைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு.
இன்னொரு விஷயம். பī