அருட்சுடர் வள்ளலார் (ஸ்ரீ இராமலிங்க விஜயம்) இரண்டாம் பதிப்பை அருட் பெருமான் மலரடியில் வைத்து வணங்குகிறோம். இராமலிங்க வள்ளலார் நவயுகத்து நபி. நமது நாட்டின் அருட்சுடர். சுத்த சமரச சன்மார்க்கத்தை விளக்கி, எல்லா உயிர்களும் ஓர் அருட் குலமாக வாழும்படி செய்யவே வள்ளற் பெருமான் அவதரித்தார். அவர் பாடிய அருட்பா சர்வாத்ம சமரச வேதமாம். இதன் உண்மை நாளுக்கு நாள் நன்கு விளங்குகிறது.
இந்த அருள் வேதத்தின் பொருளும் பெருமையும் அதைப் பாடிய ஜீவகாருண்ய மூர்த்தியான அருட் சோதி வள்ளலார் பெருமையும் தமிழருக்கு நன்கு விளங்கவே இந்நூல் சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்களால் எழுதப்பெற்றது. அருட்பாவை ஆதாரமாகக் கொண்டே வள்ளலார் வரலாற்றை ஆசிரியர் எழுதியுள்ளார். அருட்பாவின் திருவுள்ளம் என்றே இந்நூலைக் கூறலாம். இப் பதிப்பில் பல திருத்தங்கள் செய்யப் பெற்றுள்ளன. "அருட்பா விளக்கம் " சேர்க்கப் பெற்றுள்ளது.
இவ்வரிய நூலை ஆர்வமுடன் அச்சிட்டுதவிய ஈப்போ அன்பர் ப. அ. கருப்பஞ் செட்டியார் அவர்களுக்கு எமது நன்றி. இவர் நல்ல தமிழறிஞர், சன்மார்க்கர், ஈகையாளர், அருட்பா நேயர். அன்பர் வாழ்க
முதற் பதிப்பைப் போற்