'அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்' என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.
அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; குருபரர் என்பது சிற்றிலக்கியங்கள் பல இயற்றிய குமரகுருபர சுவாமிகளைக் குறிக்கும். இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்களை, அருணகிரிநாதர் என்ற தலைப்பிலும், குமரகுருபர சுவாமிகள் என்ற தலைப்பிலும் காணலாம்.
இருவரும் சிறந்த புலவர்கள்; பக்தர்கள்; துறவிகள்; வடமொழிக் கலைகளையும், தமிழ்க் கலைகளையும் கற்றுணர்ந் தவர்கள்.
இருவர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. குமரகுருபரர் பாடல்களிலே வடமொழியல்லாத வேற்று மொழிச் சொற்களும் உண்டு.
தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்தால், தமிழ் கெட்டுப் போய்விடும்; அதன் தனித்தன்மை போய்விடும்; அதன் தூய்மை அழிந்துவிடும்; தமிழே அழிந்து போய் விடும்; என்ற