ஆலமும் அமுதமும் - திரு. வி. கலியாணசுந்தரனார் Aalamum Amutamum by Thiru. V. Kalyanasundaram was first published in 1944. ஒருவன் "உலக வாழ்க்கையே வேண்டாம்" என்று கடவுள் திருப்பெயரை மட்டும் ஓதியவண்ண மிருக்கிறான்; மற்றொருவன் கடவுள் நினைவேயின்றி உலக வாழ்க்கையில் அழுந்திக் கிடக் கிறான். இவ்விருவருள் எவன் கடவுளிடத்தில் அன்புடையவனாவன்? சமயங்களின் கொள்கைகள் பலதிறத்தன. அவைகளுள் இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று, விடுதலைக்கு இயற்கைவாழ்க்கையைத் துறத்தல் வேண்டுமென்பது; மற்றொன்று, விடுதலைக்கு இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டுமென்பது.இவற்றுள் பின்னையது, எனது கல்வி கேள்வி ஆராய்ச்சி அநுபவம் முதலியவாற்றான் தெருண்ட உண்மைக்கு அரண்செய்வதாய் நிற்கிறது. அதனால் அச்சீரிய கொள்கையை வாய்ப்பு நேரும்போதெல்லாம் வலியுறுத்துவது எனது தொண்டுகளுள் ஒன்றாய் நிகழ்ந்து வருகிறது.
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.