இந்தப் புதினத்தை வாசித்து முடித்த போது யாருடைய அண்டை வீட்டிலோ அமர்ந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையைத் தாமரையிலை மீது படிந்த தண்ணீராய் ஒட்டாமல் எட்ட நின்று பார்த்த ஒரு உணர்வைத் தருகிறது. இங்கு சற்று இளைப்பாறிவிட்டு மேலே செல்லலாம் என்று தோன்றாதபடி சுவாரசியமான சம்பவங்களும் உரையாடல்களும் நம்மைக் கதையின் கடைசி வரி வரை அழைத்துச் செல்கின்றன. தன்னை முழுவதுமாய் இழக்கும் போதுதான் பனித்துளி பாற்கடலில் கலக்க முடியும்.
- இறையன்பு IAS